போதை பொருள் வழக்கில் தன்னை பற்றிய செய்திகள் வெளியிட இடைக்கால தடை கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். பாலிவுட்டில் போதை பொருள் விவகாரம் சம்பந்தமான விசாரணை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஸ்ரத்தா கபூர், சாரா அலிகான் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து ரகுல் பிரீத் சிங் தேசிய போதை மருந்து தடுப்பு துறை நடத்திய விசாரணையில் ஆஜரானார். இந்நிலையில், தனது புகழை கெடுக்கும் வகையில் செய்திகள் வெளியிடுவதாக ஊடகங்கள் மீது புகார் கூறிய அவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.