4 வயது மகனை காப்பாற்றிவிட்டு ஏரியில் மூழ்கி பலியான ஹாலிவுட் நடிகை

ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்து புகழ் பெற்றவர். பின்னணி பாடகியும் ஆவார். 33 வயதான இவர், தனது 4 வயது மகன் ஜோசியுடன் கலிபோர்னியாவில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தன் மகனை அழைத்துக் கொண்டு புறநகரில் உள்ள ஏரி ஒன்றில் படகு சவாரி சென்றுள்ளார். மாலை 6 மணி ஆகியும் திரும்பாததால் படகுத் துறை நிர்வாகம் மீட்புகுழுவிற்கு தகவல் அனுப்பியது. விரைந்து வந்த மீட்பு குழுவினர் தேடியதில் படகில் நயாவின் மகன் மட்டுமே இருந்துள்ளார். சிறுவனிடம் விசாரித்ததில் அம்மாவுடன் தண்ணீரில் இறங்கி விளையாடியதாகவும், என்னை படகில் ஏற்றிய அம்மா படகில் ஏறவில்லை என்றும் தெரிவித்திருந்தான். 

இந்நிலையில் 6 நாட்களுக்கு பிறகு நயாவின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘நயா, தன் மகனுடன் ஏரியின் நடுப்பகுதி வரைக்கும் சென்றிருக்கிறார். மகனுக்கு லைப் ஜாக்கெட் அணிவித்தும் தான் அணியாமலும் தண்ணீரில் இறங்கி நீந்தி விளையாடி இருக்கிறார். அவர்கள் ஆழமான பகுதியில் இருந்ததால் அங்கு ஏற்பட்ட திடீர் நீரோட்டத்தில் சிக்கி உள்ளனர். நயா தன் மகனை படகில் ஏற்றி விட்டிருக்கிறார். தான் ஏறுவதற்குள் அவர் ஒரு பக்கமும், படகு ஒரு பக்கமுமாக பிரிந்திருக்கிறது. நயா ஏரியில் மூழ்கி பலியாகியுள்ளார்’ என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: