அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானை கொலை நடிகர், நடிகைகள் கண்டனம்

கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் இருந்து கர்ப்பிணி யானை ஒன்று உணவு தேடி ஊரை நோக்கி வந்துள்ளது. அப்போது வெடி பொருட்கள் நிரம்பிய அன்னாசி பழத்தை யாரோ யானையை சாப்பிட வைத்துள்ளனர். சாப்பிட்டதும் யானையின் வாயிலேயே அந்த வெடிபொருள் வெடித்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய யானை சிறிது நேரத்திலேயே அங்கிருந்த ஆற்றில் விழுந்து இறந்தது. பிரேத பரிசோதனையில் அதன் வயிற்றில் இருந்த குழந்தை யானையும் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

நடிகை அமலாபால் கூறும்போது, ‘மிருகங்கள்தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள். அவர்களின் அந்த இடத்திலேயே பட்டாசுகளை வைத்து கொல்ல வேண்டும்’ என கோபமாக தெரிவித்துள்ளார். நடிகை வரலட்சுமி கூறும்போது, ‘அவர்கள் மனிதர்கள் இல்லை. அரக்கர்கள். இந்த அரக்கர்களுக்கு கொரோனா வர வேண்டும்’ என்றார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ‘அந்த யானைக்கு நடந்த சம்பவம் நெஞ்சை  உலுக்குவதாக உள்ளது. மனிதாபிமானமற்ற இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.  இந்த குற்றவாளிகள் மீது கடுயான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என  தெரிவித்துள்ளார். நடிகை ராசி கன்னா கூறும்போது, ‘இது இதயத்தை உடைக்கும் ஒரு சம்பவம். மனித நேயம் இறந்துவிட்டது’ என்றார்.
நடிகை பிரணிதா பதிவிட்டுள்ள டிவிட்டில், குட்டியை வயிற்றில் சுமக்கும் யானை ஒன்று, ‘நாங்கள் உங்களை நம்பினோம் ஆனால் நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்கள்’ என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். 

Related Stories: