சுயதனிமையில் பிந்து மாதவி

சுயதனிமையில் பிந்து மாதவி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருடைய வீட்டில் மாநகராட்சியினர் வந்து ஸ்டிக்கர் ஓட்டி, சம்பந்தப்பட்டவரை தனிமைப்படுத்தி வருகின்றனர். தற்போது இதுபோன்ற விவகாரத்தில் பிந்து மாதவியும் சிக்கி உள்ளார். சென்னையில் அவர் வசித்து வருகின்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த குடியிருப்பு வாசலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் வந்து சீல் வைத்துள்ளனர். இதுபற்றி டிவிட்டர் பதிவு ஒன்றில் பிந்து மாதவி கூறுகையில், "எனது மாடி குடியிருப்பில் வசிப்பவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்கள் கட்டிடத்தில் இருக்கும் அனைவரும் இனி வரும் 14 நாட்களுக்கு சுயதனிமையில் இருக்க போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: