தங்கையாக நடிக்க மறுத்த மகிமா நம்பியார்

மகாமுனி படத்துக்கு பிறகு சில புதுப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள மகிமா நம்பியார் கூறுகையில், ‘நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில், தினமும் வீட்டில் கண்ணாடி முன் நின்று நடிப்பேன். வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன். கேரளாவுக்கு  லொகேஷன் பார்க்க வந்த டைரக்டர் சாமி, சிந்து சமவெளி படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க அழைத்தார். படிப்பை காரணம் காட்டி நடிக்க மறுத்துவிட்டேன்.

பிறகு சாமி மூலமாக, அன்பழகன் இயக்கிய சாட்டை படத்தில்  நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மகாமுனி எனக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது. தற்போது ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ஐங்கரன், விக்ரம் பிரபுவுடன் அசுர குரு படங்களில் நடிக்கிறேன். ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பு மிகவும்  பிடிக்கும். அவர்களுடன் சேர்ந்து நடிக்க ஆசை’ என்றார்.

Related Stories: