ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வந்த ஜுரத்தைவிட அதற்கு சிகிச்சை பெற்றதற்காக வந்த பில் நடுக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி மெய் பட நிகழ்ச்சியல் அவர் கூறும் போது,’மருத்துவ துறை சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இப்படத்திற்கு என்னை அணுகிய போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒருமுறை காய்ச்சல் ஏற்பட்டதால் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு சென்றேன். மருத்துவர்களின் கட்டாயத்தால் பலமுறை தேவையற்ற பரிசோதனைகள் செய்தேன்.