கார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் சுல்தான்

தேவ் படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படங்கள் கைதி, ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் ஆகியோரது படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக, ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

நடிகர் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், மலையாள நடிகர் லால் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு விவேக் மெரிவீன் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் பெயரை வித்தியாசமான முறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுல்தான் பட ஷூட்டிங்க்கில் 4 ஆம் நாள் எனக் குறிப்பிட்டு ஒரு போட்டோவை பகிர்ந்தார்.

இதனால் ஹீரோயின் மீது படக்குழு கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் ராஷ்மிகா படக்குழுவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த போட்டோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு சுல்தான் என்று டைட்டில் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories: