ரஜினி பேரனின் வண்ண வீடு

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தனது மகன் அதாவது ரஜினியின் பேரன் வேத் மீது அன்பும் அக்கறையும் செலுத்தி கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். பிறந்த சில மாதங்களிலேயே குழந்தைகளின் கையில் செல்போன் கொடுத்து அவர்களை செல்போன் அடிமைகளாக மாற்றும் பெற்றோர்களுக்கு மத்தியில் சவுந்தர்யா தனது மகனை வளர்க்கும் விதமே வித்தியாசமாக உள்ளது.

மணல் ஓவியம் வரைவது எப்படி, பெயிண்டிங் செய்யும் பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சிகளையும் அளித்து புதிய சிந்தனைகளை வேத் மனதில் விதைக்கிறார் தாய் சவுந்தர்யா. சமீபத்தில் தேவ் அருகில் அமர்ந்து வண்ணங்கள் தீட்டச் சொல்லிக்கொடுத்தார். அழகான ஒரு வீட்டை வரைந்து முடித்து அதற்கு ஃபினிஷிங் டச் கொடுத்தான். இப்படத்தை சவுந்தர்யா வெளியிட்டுள்ளார்.

Related Stories: