தமிழில் பூ, மரியான் உள்பட சில படங்களில் நடித்து இருந்தவர், பார்வதி. மலையாளத்தில் ஓரிரு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள அவர், விரைவில் படம் இயக்க உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விரைவில் நான் படம் இயக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்கான கதை தயாராக இருக்கிறது. ஏற்கனவே பல நடிகைகள் படம் இயக்கி வெற்றிபெற்று இருக்கிறார்கள். ஒரு கதாநாயகியாக இது எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும்.