தனுஸ்ரீ தத்தாவின் ‘மீடூ’வில் மீண்ட நடிகர்

தீராத விளையாட்டுப் பிள்ளை ஹீரோயின் தனுஸ்ரீ தத்தா, இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன், ஹார்ன் ஓ.கே பிளீஸ் என்ற படத்தில் நடித்தபோது, நானா படேகர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக, கடந்த ஆண்டு அவர் புகார் அளித்தார். இதனால், ஒரு புதிய படத்தில் இருந்து நானா படேகர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நானா படேகர் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரித்தனர்.

அப்படத்தில் பணியாற்றியவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, அதுபோல் ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்பதாக தகவல் தெரிவித்தனர். உடனடியாக நானா படேகர் மீதான பாலியல் புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று விடுவித்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தனுஸ்ரீ தத்தா, ‘நானா படேகர் மீது போலீசார் குற்றம் இல்லை என்று சொல்லவில்லை. அவர் மீது அனுதாபம் வருவதற்காகவே, அவருடைய ஆதரவாளர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்புகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: