போதை மருந்து விவகாரம்... டென்ஷன் ஃப்ரீ... சார்மி, முமைத்

கடந்த 2017ம் ஆண்டு நடிகர், நடிகைகளுக்கும், மாணவர்களுக்கும் போதை மருந்து சப்ளை செய்ததாக ஐதராபாத்தில் கல்வின் மஸ்கர்னஹா என்ற வாலிபரை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். போதை மருந்து பயன்படுத்தியதாக நடிகர்கள் ரவி தேஜா, தருண், நவ்தீப்,  நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர்கள் புரி ஜெகநாத் உள்ளிட்ட பிரபலங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

கடந்த 2 வருடமாக நடந்த இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்ட சார்மி, முமைத்கான், புரி ஜெகநாத், ரவி தேஜா உள்ளிட்ட செலப்ரட்டிகள் அனைவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். போதை மருந்து பயன்படுத்திய வழக்கிற்குள் சிக்கி என்ன நடக்குமோ என்ற டென்ஷனலிருந்த இவர்கள் தற்போது டென்ஷனிலிருந்து மீண்டிருக்கின்றனர்.

Related Stories: