கடந்த 2017ம் ஆண்டு நடிகர், நடிகைகளுக்கும், மாணவர்களுக்கும் போதை மருந்து சப்ளை செய்ததாக ஐதராபாத்தில் கல்வின் மஸ்கர்னஹா என்ற வாலிபரை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர். போதை மருந்து பயன்படுத்தியதாக நடிகர்கள் ரவி தேஜா, தருண், நவ்தீப், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர்கள் புரி ஜெகநாத் உள்ளிட்ட பிரபலங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.