நாடக மேடை கைவிடப்பட்டதா? கார்த்திக் நரேன்

ரகுமான் நடிப்பில் ரிலீசான துருவங்கள் 16 படத்தை இயக்கியவர், கார்த்திக் நரேன். அடுத்து அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித் நடித்த நரகாசூரன் படத்தை இயக்கினார். ஆனால், பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படம் இன்னும் ரிலீசாகவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விரைவில் நரகாசூரன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில், கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் கண்ணாடி படத்தில் நடிகராக அறிமுகமாகிறேன்.

மிகவும் சின்ன கேரக்டர்தான். கல்லூரி மாணவனாக வருகிறேன். சந்தீப் கிஷன் நெருங்கிய நண்பர் என்பதால்,  அவர் கேட்டதால் நடித்தேன். தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை. பார்த்திபன் நடிப்பில் நான் தயாரித்து இயக்கும் நாடக மேடை படம் கைவிடப்படவில்லை. அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க கொஞ்சம் காலதாமதம் ஆகும். விரைவில் அருண் விஜய், நிவேதா பெத்துராஜ் நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறேன்’ என்றார்.

Related Stories: