எண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா வழிபாடு..!!

தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற சாய்பாபாவை வேண்டி கொண்டு வரும் ஒன்பது வியாழக்கிழமை வழிபாடு நடத்தினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

சீரடி சாய்பாபா, பல கோடி மக்களின் மனதில் தெய்வமாக மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல இடம் பிடித்துள்ளார். அவரை முழுமையாக, உறுதியாக நம்பியவர்களுக்கு நினைத்தது நடக்கிறது. இதனால் தான் ஊர் தோறும் சீரடி சாய்பாபாவின் ஆலயங்கள் உலகமே வியக்கும் வண்ணம் உருவாகி வருகின்றன.

இந்த பிறவியில் சீரடி சாய்பாபா பற்றி அறிந்து உணர்ந்து, அவரது மகிமையை புரிந்து கொண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.

வழிபாட்டை எந்த ஒரு வியாழக்கிழமை ஆனாலும் அன்றில் இருந்தே ஆரம்பிக்கலாம். விரதத்தை ஆரம்பிக்க முன்னர் சாயி நாமத்தை மனதார வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். விரததத்தை ஆண், பெண், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிக்கொண்டு சாதித்துக் கொள்ள வேண்டும்.

Related Stories: