பாபா கேட்டது பணம் அல்ல : விலை மதிப்பில்லாத பண்பு நலமே!..

அடியவர்களுக்கு தான தர்மத்தைப் பற்றிப் புரிய வைக்கவும், பணத்தின் மீது உள்ள பற்று குறைவதற்கும், அவர்கள் மனம் தூய்மை அடைவதற்கும் பாபா தட்சணையைக் கட்டாயமாகக் கேட்டுப் பெற்றார். பாபா, தான் பெற்ற தட்சணையைப் பல மடங்காகத் திருப்பிக் கொடுப்பது என்ற ஒரு விசித்திரமான நியதியைக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் கிடைத்த தட்சணை ரூபாய் இருபத்தைந்து என்றால், அன்று அவர் விநியோகம் செய்தது ரூபாய் முந்நூறுக்கு மேல் இருக்கும். நாள்தோறும் பாபாவிடம் தானம் பெற மசூதிக்கு இரவு 8 மணியளவில் ஒரு பெரிய கூட்டமே வருவது வழக்கம். வந்தவர் அனைவருக்கும் அவரவர்களின் தேவைக்கேற்ப பாபா மிகச் சரியான தொகையை எப்படி அளித்தார் என்பது, யாராலும் புரிந்துகொள்ள முடியாத அதிசயமாகும். பல சந்தர்ப்பங்களில் அவர் மறைபொருளாகவும், குறியீடாகவும் தட்சணை கேட்பதுண்டு. எனக்கு அது தேவையும் இல்லை. ‘பணம்’என்று நான் குறிப்பிட்டது விலை மதிப்பில்லாத பண்பு நலத்தையே. நீ ‘யோக வாசிஷ்டம்’படித்துக்கொண்டிருக்கிறாய் அல்லவா? அந்த உயர்ந்த நீதி நூலின் நெறிகளை உணர்ந்து உன் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டால், அதுவே உன் மனத்தில் வாசம் செய்யும் எனக்குத் தரும் தட்சணையாகும்.

இதையேதான் நான் கேட்டேன்!” என்று, தான் தட்சணை கேட்டதன் உட்பொருளை உரைத்தார் பாபா. மதிப்பே பெறாத சாதாரண உலோகக் காசுகளை பாபா விரும்பி தட்சணையாகக் கேட்டுப் பெற்றார் என்று நாம் நம்பினால், அது நமது அறியாமையைக் காட்டுகிறது என்பதைத் தவிர வேறென்ன கூற முடியும்? இந்த உலகப் பொருள்கள், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றின் மீது இருக்கும் பற்றை விலக்க வேண்டும். இவை கூடவே கூடாது என்று பொருள் அல்ல. பணம், புகழ், கௌரவம், ஆதாயம் ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டு அவற்றுக்காகவே உழைக்கக் கூடாது. அவற்றுக்காக ஏங்கக் கூடாது. உள்முகச் சிந்தனை. மனிதன் வெளியில் நடப்பவற்றையே எப்போதும் பார்க்கிறான். அதை விடுத்து உட்புறமாகப் பார்க்க வேண்டும். அதாவது தியானம் செய்ய வேண்டும்.

கொலை, கொள்ளை, மற்றவர்களை அழிப்பது போன்ற கொடுஞ்செயல்களைச் செய்யக் கூடாது. உண்மை பேசுவது, நேர்மையைக் கடைப்பிடிப்பது ஆகியவை. புலன் இன்பம் தருபவை ப்ரியாக்கள். ஆன்மிக வளர்ச்சி தருபவை ச்ரியாக்கள். பேராசை, அதிகப் பற்று போன்றவை புலன் இன்பத்துக்கே வழி வகுக்கும். அவற்றை விலக்கி தியானம், கோயில், தெய்வம் போன்றவற்றில் மனதை ஈடுபடுத்த வேண்டும். மனதையும் உணர்வையும் அடக்கி ஆள வேண்டும். மனத்தூய்மை வேண்டும். நல்ல குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் கடவுளைக் காண இயலாது. எனவே, கடவுளைக் காண வேண்டும் எனில் ஒரு குருவை நாட வேண்டும். முதல் ஒன்பது கட்டளைகளையும் நிறைவேற்றினால், கடவுளின் அருள் தானாகக் கிட்டும். ஒன்பது கட்டளைகளையும் ஒழுங்காக நிறைவேற்றுபவரிடம் கடவுள் மகிழ்ச்சியுற்று விவேகம், வைராக்கியம் ஆகியவற்றை அளித்து, தன்னை அடைய வழி காட்டுவார்.

Related Stories: