துதிப்போம் திதிகளை...

இந்த இதழில் அம்பாளை தரிசனம் செய்து பின் இறங்கும் பொழுது உள்ள திதியும் அதன் துதிகளை பற்றியும் பார்ப்போம்.

அகஸ்திய முனிவரின் சோடச மாலை  அமர பட்ஷம் -   

கிருஷ்ண பட்ஷம் ( இறங்கும்பொழுது ) தேய்பிறை

1-வது படி பிரதமை ஸ்ரீ சித்ராதேவி

நிரஞ்சனமாய் நிராமயமாய் நினைவே யாகி

நீங்காத பெருவாழ்வே லோக மாதா

பரஞ்சோதியான பூரணியே தாயே

பாற்கடலே எனையீன்ற பரமே சக்தி

பரமாகி யுலகமெலாம்வளர்க்கும் தேவி

சங்கரியே பெளர்ணமியாய் வடிவங்

காட்டித்

துரிவான ரிஷிமுனிவர் பணிகொள் செல்வீ

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

2-வது படி த்விதியை ஸ்ரீ ஜவாலாமாலினி தேவி

பிரியமுடன் பதினாலு கலையுமாகி

பேசரிய தீபவொளி பிரம்மாகி

உரியதொரு தந்திவெளி தீபங் காட்டி

ஓங்கார ரீங்கார சக்தியாகி

சரியென்று மதித்திடவே என்முன் வந்த

சங்கரியே சாம்பவியே சர்வரூபி

துரியதுரியாதீத மமர்ந்து நின்ற

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

3-வது படி திருதியை ஸ்ரீ  ஸர்வமங்களாதேவி

பத்துடனே நாலாகி எங்குத்தயனாய்

பராபரையே பரஞ்சோதி பருவமாகி

சித்தாகி உலகமெல்லாம் மயக்கும்தாயே

திருவருளே திருபுரையே தேவியம்மா

வித்தாகி முளைத்தெழுந்த சுடரே தீப

விமலியே குண்டலி ஓங்கார சக்தி

சத்தான அண்டமெல்லாம் நிறைந்து நின்ற

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

4-வது படி சதுர்த்தி ஸ்ரீ  விஜயா தேவி

பாசவலை தனில்சக்கி அலையாமல் தான்

பண்புடனே அடியவருக் கருளவேண்டி

நசமுடன்சதுரகிரிமலையிலேதான்

நித்தியமும் நடனமதுபுரியும் தேவி

பேசரிய ஞானமதைஎனக்களித்த

பேரான சுமங்கலியே பெரியோருக்குத்

தோஷமது வாராமல் காக்கும் தேவி

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

5. வது படி பஞ்சமி நீலபதாகா தேவி

சொல்லவொண்ணாச் சோதிமயமான தாயே

சுந்தரியே உன்பாதம் கொடுப்பாய் அம்மா

நல்லதொரு திருநடனமாடுந் தேவி

நாதாக்கள் பணிகின்ற வாம ரூபி

வல்லசித்தர் மனதிலுறை மகிமைத் தாயே

வாலை திரிபுரை எனக்கு வாக்குத் தந்து

தொல்லுலகத்தாசைதனை மறக்கச் செய்வாய்

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

6 - வது படி சஷ்டி ஸ்ரீ  நித்யா தேவி

அண்டாண்ட புவனங்கள் நீயே யானாய்

அம்புவியில் ஜோதிமனோன் மணியுமானாய்

கண்டதொரு காட்சிகளைச் சொல்லப் போமோ

காரணியே பூரணியே கன்னியாளே

விண்டதொரு மகிமைகளை வெளிவிடாமல்

வேண்டியதோர் தீட்சைகளை முடித்துவைப்பாய்

தொண்டர்களை எப்போதும் ஆள்வாயம்மா

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

7-வது படி சப்தமி ஸ்ரீ  குலசுந்தரி தேவி

காலான சந்திரகலை நாலுங் காட்டி

கண்மூடி நிற்குமுன்னே சோதி காட்டி

மாலான அரிதனையு மங்கே காட்டி

மறைந்துநின்ற சுயரூப மங்கே காட்டி

பாலான சோமகலைப் பாலுங் காட்டி

பாங்குடனே எனைவளர்த்த பருவமாதா

சூலான தாய்வயிற்றில் சொரூபம்தந்த

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

8-வது படி அஷ்டமி ஸ்ரீ  த்வரிதா தேவி

நீதமுடன் உருவாகி அரூபமாகி

நிஷ்களமாய் நிராமயமாய் நின்ற சூலி

வேதமுடிவாகிநின்ற விமலிந் தாயே

விண்ணொளியாய்ப்பரவெளியாய்க் கண்ட சக்தி

பாத்மதில் சிலமபுகளில் கலில் என்றோத

பக்தருக்காய்ப் பிரசன்ன மாகும் ரூபி

சோதனையாய்ச் சோமகலையாக வந்த

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

9-வது படி நவமி ஸ்ரீ  சிவதூதி

திங்களொளியாய் அமர்ந்தசப்தகன்னி

தேவர்களுக் கமுதளித்த சிறு பெண்ணாத்தாள்

அங்கசித்தி ரீங்காரி அனந்த ரூபி

அண்டரெல்லாம்போற்றவதரித்ததேவி

மங்கலமாய் நவராத்திரி பூசைக்காக

வந்தமர்ந்த திரிசூலி மகிழோங் காரி

துங்கமிகு முயர்பரமானந்திதாயே

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

10 - வது படி தசமி ஸ்ரீ  மஹாவஜ்ரேஸ்வரி தேவி

பந்தவினை போக்கிடுமென் அருமைத்தாயே

பாக்யவதி பூரணியே பருவ மாதா

வந்துநீ அருள்க எனை வளர்த்த மாதா

வான்வழங்கப் பெற்ற சுடரொளியே கண்ணே

என்றனையும் சித்தனெனப் பெயருமிட்டே

எட்டெழுத்தின் மூன்றெழுத்தாய் விளங்கி நின்றாய்

சுந்தரியே கன்னிகையே அகண்ட ரூபி

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

11 - வது படி ஏகாதசி ஸ்ரீ  வஹ்ளிவாஸினி

உன்னுடைய கிருபை வைத்துத் தவத்தைப் பெற்றே

ஒன்றாகி இரண்டாக ஆறுமாகி

தன்னுடைய தீக்ஷைவைத்து ஞானம் தந்த

சங்கரியே சாம்பவியே சாகாக் காலே

கன்னிகையே மதுராசமான தேவி

கற்பகமே கனகப்ரகாசமான

துன்னுதிரு சுழிமுனையி லாடுந் தேவி

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

12 - வது படி துவாசதி ஸ்ரீ  பேருண்டாதேவி

பஞ்சமியில் உலகமெல்லாம் பெற்ற தாயே

பரப்பிரம்ம மானதொரு பாக்ய ரூபி

தஞ்சமென்ற சித்தர்களைக் காக்கும் சக்தி

தமியேனை ஈடேறச் செய்வாய் தாயே

பஞ்சையாய்த் தொண்ணூற்றாறு தத்துவத்தை

பரக்கடித்த சுமங்கலியே ரிஷிகள் தம்மை

துஞ்சுதலற் றென்றென்றும் இருக்கச் செய்தாய்

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

13 - வது படி த்ரயோதசி ஸ்ரீ  நித்யக்லின்னா தேவி

மதியான நாலகலை யான ரூபி

மாதாவே வரபிரசாதங்கள் தந்து

கதிபெறவே செய்த பூரணியே அம்மா

கிருபையுடன் தவநிலையே காட்டி வைத்தாய்

பதிவான கலை நாலும் பாழ் போகாமல்

பாக்கியங்கள் தந்தருளும் பரையே சித்தர்

துதிதனையே பெரிதென்று நினைக்கும் தேவி

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

14  - வது படி சதுர்தசி ஸ்ரீ  பகமாலினி தேவி

வாழ்வான உலகமெல்லாம் நீயே யம்மா

மண்டலங்கள் எங்கெங்கும் வளர்த்த சோதி

தாழ்வேது உனையடைந்த சித்தர்க்கெல்லாம்

தங்கமயமாய் இருந்த தேவி ரூபி

பாழ்போகா வாக்கு நல்ல சித்தி தேந்து

பாக்கியமே அடங்காத அண்டத் துடே

சூழ்ந்திருந்து மகிழ்ந்தென்னைப் பெற்ற மாதா

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

15 - வது படி அமாவாசை ஸ்ரீ  காமேஸ்வரி தேவி

சேமமது தரவெனக்குநேரே வாவா

திரிபுரையே சாம்பவியே மணப்பதுவாணி

காமனையும் வாமனையும் படைத்த தாயே

கன்னிகையே வளர்பிறையே கனக மாதா

நீ மறைவாய்நின்றதென்ன நினைவே யம்மா

நீடூழி காலமெல்லாம் நினைவே யாகி

என்றென்றும் என்னை காப்பாய் மாதா

சோதிமனோன் மணித்தாயே சுழினை வாழ்வே !

ஆன்மீக பலன் வாசகர்கள் அம்பாளின் அருளை பெற திதிகளை போற்றி வாழ்வில் வசந்தத்தை பெறுங்கள்.

குடந்தை நடேசன்

Related Stories: