கீழே கொடுக்கப்பட்டுள்ள சீரடி சாயிபாபா பாமாலையை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
வாழ்வை வசந்தமாக்கும் சாயிபாபா பாமாலைஷீர்டியே உலகின் அழகிய புனிதத்தலம்
ஸ்ரீ சாயிபாபா அவதரித்து அருளிய தலம்கல்பதருவினும் பேறு பெற்ற வேப்ப மரம்அதன் மடியில் அமர்ந்தாரே இறைவனின் வரம்பதினாறு வயதே நிரம்பிய பாலகனாம்பல சூரிய சந்திரர் சேர்ந்த ஒளிப்பிழம்பாம்ஞானம், அழகு நிறைந்த ஆண்டவர் மகனாம்நீர் அமர்ந்ததும் கசப்பு வேம்பும் இனிப்பானதாம்திருவே அமர்ந்தாள் உன் நெற்றியில் திலகமாய்தேஜஸ், ஸெளம்யம் நிறைந்த உருவமாய்வெயில், மழை பாராமல் தவமும் செய்தாய்பாலகன் ரூபத்திலே உலகில் தோன்றினாய்உன் தாய், தந்தை, குலம் யாரும் அறியாரேஉலகம் என் வீடு, இறை என் தாய் என்றாயேசிலர் மொழிந்தனர் நீ சிவனின் ரூபம்சிலர் அறிந்தனர் நீ விஷ்ணுவின் ரூபம்தத்தாத்ரேய ரூபமோ? ஸ்ரீ ராமனே நீதானா?பீர் அவுலியாவோ? பரப்ரஹ்மமே நீதானோ?எந்த ரூபமானாலும் நீயே எங்கள் தெய்வமானாய்பக்தனின் இஷ்ட ரூபத்திலே தரிசனமும் அளிப்பாய்எத்தனை எத்தனை லீலைகள் புரிந்தாய்எண்ணற்ற ஏழைகளின் துன்பங்கள் துடைத்தாய்தெவிட்டாத இன்பமன்றோ உந்தன் திருக்கதைதான்கேட்பவரும் திளைப்பரே கானில் தேனருவி தான்மத, ஜாதி பேதங்களால் அழியும் மானிடம்உய்வுற உறவுப்பாலம் அமைத்த மஹாஅவதாரம்சாந்த் படீலின் குதிரையை தேடித் தந்தாய்திருமண வீட்டாரோடு ஷீர்டியை அடைந்தாய்ஆன்மீகத் தேடலில் அனைவரையும் அழைத்தாய்அருளோடு சேர்ந்து அற்புத அநுபவங்களும் தந்தாய்மசூதித்தாயாம் துவாரகமாயி! அதில் வசித்து,பக்தர்களை ரட்சிக்கும் நீ அன்னையன்றோ? சாயிதிருக்கரமளித்த உதி அருமருந்தாகும் – உன்திருஅருட்பார்வை துயரினைப் போக்கும்அருள் துனியில் எங்கள் பாபங்கள் தூசாகும் – உன்திருப்பாதங்கள் தொட்ட ஷீர்டி சொர்க்கமாகும்அடைக்கலம் புகுந்ததோரை அன்புடன் ரட்சித்தாயே – உன்அற்புத லீலைகள் அமுதே! அமுதினும் இனிய பேரமுதேநீரூற்றி அகல்தீபங்கள் எரியச் செய்தாய்ஒளிஜோதியிலே அஞ்ஞான இருள் களைந்தாய்பக்தனின் கண்கள் நீர் சொறிந்தாலே அக்கணமே,துயர் துடைக்க அவன் அருகில் நிற்பாயேதாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு கோளாறுவருந்தி அழுதார் இல்லையே புத்திரப்பேறுஉன் திருவடி அடைந்தார்க்கு இல்லை ஜாதகமேஅளித்தாய் மாங்கனிகள் ! அடைந்தார் தாமு சந்தானமேவிதியையும் மீறுமே உன் அற்புத அருளுமேநம்பிக்கையுடன் பக்தன் உன்னை பணிந்திட்டாலேசிவபக்தன் மேகாவையும் நீ சினந்தாயே,உன்னை முஸ்லிம் என்று பேதம் கொண்டதாலேபக்தருக்குள்ளே இல்லையே ஏற்றத்தாழ்வேமேகாவுக்கும் நீ இரக்கம் காட்டினாயேஉள்ளேயே அவனை நீ உருமாற்றினாயேஉன்னில் சிவம் கண்டு அவன் இறை அடைந்தானேகங்கை, யமுனை நீர் உன் பாதத்தில் சொறிந்தாயேதாஸ்கணுவின் பிரயாகை தாகம் தணித்தாயேமசூதியில் அமர்ந்து நீ அளித்தாய் ஞானோபதேசம்பசியுற்றோருக்கு செய்வீர் அன்னதானம்ஏழைகள் மேல் இரக்கம் கொள் என்றாயேஉண்மையே சொல், நேர்மையாய் வாழ் என்றாயேஷீர்டியின் கல், புல் கூட பேறு பெற்றதேஉன் திருவடி முத்தமிட்டு இறைவனை அடைந்ததேஅப்புல்லும், கல்லுமாய் நானிருந்தாலே – உன்திருவடியை என் சிரஸேந்தி களித்திருப்பேனேஎத்தனை தவம் செய்தேன் நான் அறியேனேஇக்கணம் உன்னைத்தொழும் பேறு பெற்றேனேஇறையருள் பெற்ற மனிதரால் மட்டுமேஉன்னை பூஜிக்கும் பாக்கியம் கிட்டிடுமேஉன் அருட்பார்வை என்மேல் பட்டாலேஎன் தீவினை போய் ஆனந்தம் நிறைந்திடுமேஉன் மென்கரங்கள் என் சிரஸின் மேல் வைப்பாயேஉத்தமன் நினைத் தொழுகின்றோம் செவிமடுப்பாயேஉன் பாதாரவிந்தம் தொட்ட தூசு ஒன்று போதுமே,என் கண்களிலே ஒற்றிக் கொண்டாடிடுவேனேஉன் பதகமலத் தீர்த்தம் என் நாவில் பட்டாலேநான் பெற்ற இன்பத்தை பாடிக் களித்திடுவேனேஎன் கனவினில் என்னை ஆட்கொள்வாயேநிஜந்தனிலே நிதமும் என் துணை நிற்பாயேஅணுவிலும் அணுவானாய், அகில அண்டமும் நீயானாய்எங்கெங்கு நோக்கிலும் நீயே நிற்கின்றாய்என் அன்னை நீ ! தந்தை நீ ! இவ்வுலகையேமூவடியாய் அளந்திட்ட திருமாலும் நீஅகிலம் உன் இல்லம், அண்ட சராசரம் உன் ரூபம்அடியார்க்கு அருள அல்லவா நீ எடுத்தாய் அவதாரம்குசேலனையும் குபேரனாக்கும் சக்தி இருந்துமே,உன் உணவை பிச்சை எடுத்து உண்டாய்சாயி நாமமே போக்கிடும் பல துக்கங்கள்சாயி நாமமே அளித்திடும் பரம சுகங்கள்சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்டாலேசாயி நாமம் நல்கும் பல நன்மைகளுமேநோயுற்றோர் பிணி வேதனை நீங்கிடுமேதுயருற்றோர் துன்பங்கள் தொலைந்திடுமேசாயி கிருபையால் தரித்திரம் மறைந்திடுமேசாயி விரதத்தால் சுகம், சாந்தி வீட்டில் நிலவிடுமேசாயி நாமம் தினமும் ஜபித்தாலுமே,ஒன்பது வியாழன் சாயி விரதம் பூண்டாலுமே,சாயி வருவார், இரங்குவார் நம்மிடமே,துன்பம் களைவார், தருவார் ஆனந்தமேசாயியே சாச்வதம் ! சாயியே சத்தியம் !இதை நம்புபவன் வாழ்விலில்லை பெருந்துன்பம்சாயியே பரமேஸ்வரன், சாயியே பரமாத்மன்சாயியே பராசக்திரூபன், சாயியே பரந்தாமன்நம்பிக்கை பக்தி, பொறுமையுடன் சரணடைவோம்சாயி அருளால் பரப்ரஹ்மானந்தம் அடைவோம்சாயிநாதருக்கே அர்ப்பணம்-