சொந்தமாக தொழில், வியாபாரங்கள் தொடங்குபவர்களுக்கு பல அனுகூலங்கள் இருக்கின்றன. அந்நபர்கள் அவர்களுக்குண்டான பணிசூழல், நேரம் போன்றவற்றை அவர்களே நிர்ணயிக்க முடிகிறது. மற்ற வேலைகளில் இருப்பவர்களை விட அதிக சுதந்திரம் இருப்பதோடு மற்றும் அதிகளவு பணத்தை சம்பாதிக்க முடிகிறது. புது தொழில், வியாபாரம் போன்றவற்றை தொடங்கி மிகுந்த செல்வம் ஈட்ட நினைப்பவர்கள், அத்தொழில்களை துவக்க சுப மாதம், நாள், நேரம் போன்றவற்றில் துவங்கவே விரும்புவர். பெரும்பாலானவர்களுக்கு “புரட்டாசி” மாதத்தில் புது தொழில், வியாபாரம் போன்றவற்றை தொடங்குவதை பற்றிய சில சந்தேகங்கள் இருக்கிறது. அவற்றுக்கான விளக்கங்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.புரட்டாசி மாதம் என்பது சூரியன் “கன்னி” ராசியில் பிரவேசிக்கும் காலம் ஆகும். “கன்னி” ராசி பெருமாளுக்குரிய ராசியாகும் எனவே இந்த மாதம் முழுவதும் பெருமாளை விரதம் இருந்து வழிபட்டு நம்மிடம் இருக்கும் தீயவைகளை அழிக்கின்ற ஒரு மாதமாக இருக்கிறது. ஜோதிட ரீதியாக பார்க்கும் போது “மிதுன ராசியில் வரும் ஆடி மாதம், கன்னி ராசியில் வருகின்ற புரட்டாசி மாதம், தனுசு ராசியில் வருகின்ற மார்கழி மாதம், மீன ராசியில் வருகின்றன பங்குனி மாதம்” ஆகிய நான்கு மாதங்களும் “அழித்தல்” அதாவது நம்மிடம் இருக்கும் தீயவைகளை அழிக்க இறைவழிபாடு, விரதம் போன்றவற்றை மேற்கொள்ளும் மாதங்களாக கூறப்பட்டிருக்கிறது.