மேலநத்தம் ஒத்தவீடு மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

மன்னார்குடி: மன்னார்குடி அடுத்த மேலநத்தம் ஒத்தவீடு  மகா மாரியம்மன் கோயில் கும் பாபிஷேகம் நேற்று  நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அடுத்த மேலநத்தம் ஒத்தவீடு மகா மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராமவாசிகளால் முடிவு செய்யப்பட்டு கடந்த 3 மாத காலமாக கோயில் புதுப்பிக்கப்பட்டு முன் மண்டபங்கள் எழுப்ப பட்டு கட்டிட பணி நிறைவு செய்யப்பட்டது. தொடர்ந்து கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 3 தினங்கள் மகா மாரியம்மன் கோயிலில் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது.

யாக சாலை யில் புனித நீர் அடங்கிய கடம் வைத்து ஹோமம் வளர்க்கப் பட்டது. இதில் 81 கலச பூஜை, கஜபூஜை உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் செய்து அதன் நிறைவாக பூர்ணாஹூதி நடைபெற்றது.இந்நிலையில் நேற்று அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கொண்ட கடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் விமான கலசங் களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு வானவேடிக் கை முழங்க சுவாமி வீதியுலா நடைபெற்றது.

Related Stories: