மன்னார்குடி: மன்னார்குடி அடுத்த மேலநத்தம் ஒத்தவீடு மகா மாரியம்மன் கோயில் கும் பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அடுத்த மேலநத்தம் ஒத்தவீடு மகா மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராமவாசிகளால் முடிவு செய்யப்பட்டு கடந்த 3 மாத காலமாக கோயில் புதுப்பிக்கப்பட்டு முன் மண்டபங்கள் எழுப்ப பட்டு கட்டிட பணி நிறைவு செய்யப்பட்டது. தொடர்ந்து கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 3 தினங்கள் மகா மாரியம்மன் கோயிலில் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது.