கழுகுமலை: கழுகுமலை கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கழுகாசலமூர்த்தி, சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வீதியுலா வந்தனர். கழுகுமலையில் பிரசித்தி பெற்ற குடைவரைக் கோயிலான கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 13ம் தேதி காலை 8 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டு தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது.
நிகழ்ச்சியின் 5ம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை 5மணிக்கு நடை திறக்கப்பட்டு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 6மணிக்கு மேல் திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. இரவு 8மணிக்கு மேல் வெள்ளி மயில் வாகனத்தில் கழுகாசலமூர்த்தி ரதவீதியுலா வந்து ஜந்தொழில் விஸ்வகர்மா சமுதாய மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஜந்தொழில் விஸ்வகர்மா சமுதாய தலைவர் துரைப்பாண்டி , செயலாளர் துரை மற்றும் விஸ்வகர்மா சமுதாய பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.