பரமத்திவேலூர்: பரமத்திவேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவினையொட்டி, பரமத்திவேலூர் காவிரி ஆற்றிலிருந்து யானை, குதிரை, பசு மற்றும் மேளதாளங்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று தீர்த்தம் எடுத்து வந்தனர். இதையடுத்து, வாஸ்து சாந்தியும் ராஜா சுவாமி பரிவார மூர்த்திகளுடன் யாக சாலை எழுந்தருளும் நிகழ்ச்சியும், முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயண யாக பூஜை, பூர்ணாஹூதி, பூதசோதனம், யாகபூஜை மற்றும் விக்னேஸ்வர பூஜையுடன் நாடி சந்தானமும் நடைபெற்றது.