சாட்டுப்புதூர் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பூதப்பாண்டி: பூதப்பாண்டியை அடுத்துள்ள சாட்டுப்புதூர் வெள்ளாளர் சமுதாயம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. சாட்டுப்புதூர் வெள்ளாளர் சமுதாய ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 8ம்தேதி தொடங்கி நடந்தது. விழாவில் தினந்தோறும் யாகங்கள், பூஜைகள் நடந்தது. நேற்று முன் தினம் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் காலையில் தேவார திருமுறை, 6ம் கால யாக பூஜை, தீபாராதனை ஆகியவை நடந்தது. காலை 9.45 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் பா.ஜ மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், மாநில பொதுக்குழு சொக்கலிங்கம், பூதப்பாண்டி மண்டல் தலைவர் விஜய்மணியன், நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர் மீனாதேவ், தோவாளை ஒன்றிய அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார், பேரூர் செயலாளர் முகமதுஷாபி, ஞாலம் ஜெகதீஷ், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ, பொருளாளர் கேட்சன், தோவாளை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் பூதலிங்கம்பிள்ளை, ஞாலம் ஊராட்சி முன்னாள் தலைவர் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை டாக்டர் இசக்கிபிள்ளை தலைமையில் திருப்பணிக்குழுவினர் மற்றும் விழா குழுவினரும், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: