திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழா 3ம் திருவிழாவான நேற்று சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் வீதிவலம் வந்தனர். நாளை குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசி திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 3ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகலில் 3ம் திருவிழா மண்டகப்படியில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகங்கள் நடந்தது.