கிருஷ்ணகிரி நரசிம்ம சுவாமி கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை,லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பவித்ரோற்சவம் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதன்படி முதலாமாண்டு கும்பாபிஷேக நிறைவையொட்டி, நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கலஸ்தாபனம், ஸ்ரீ விஸ்வக்சேன ஆராதனை, ஸ்ரீ பஞ்ச சூக்த ஹோமம், ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், ஸ்ரீ லட்சுமி குபேர ஹோமம் ஆகியவை நடந்தது. பின்னர் அன்று காலை 10 மணி முதல் பூர்ணாஹுதி, சிறப்பு அபிஷேகம், மகா மங்களாரத்தி, தீர்த்தப் பிரசாதம் ஆகியவை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சிறப்பு யாகம், மகா மந்திரகள் ஓத, சிறப்பு அலங்காரத்துடன் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

Related Stories: