பேரிகை அருகே சென்றாய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஓசூர்: பேரிகை அருகே சென்றாய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஓசூர் அருகே எஸ்.தட்டனப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய சுவாமி கோயிலில் ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரம் கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தேவதா பிரார்த்தனை, சங்கல்பம், யாகசாலை பூஜைகள், வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, வேதபாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சர்வ தர்சன நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, கோயில் தர்மகர்த்தா முரளி மற்றும் பேரிகை, சூளகிரி, முதுகுறுக்கி, எஸ்.தட்டனப்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Related Stories: