திருவண்ணாமலையில் வலம்புரி செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வலம்புரி செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் தென்றல் நகரில் அமைந்துள்ள வலம்புரி செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவையொட்டி சிறப்பு யாக சாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் யாக சாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனிதநீர் எடுத்து வரப்பட்டு, கோபுரத்தின் கலசத்தின் மீது சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: