திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம்

திருச்சி: திருவானைக்காவல்ஜம்புகேஸ்வரர்  அகிலாண்டேஸ்வரி கோயிலில்  முதற்கட்டமாக பாிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பஞ்ச பூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதையொட்டி முதல்கட்டமாக பரிவார மூர்த்திகளுக்கு நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக நேற்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 7 மணியளவில் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 7.55 மணிக்கு அனைத்து பரிவார விமானங்கள், பாிவார மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று  தாிசனம் செய்தனர். காஞ்சி சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் அர்ச்சகர்கள் பரிவார மூர்த்தி சன்னதி, விமானங்கள் மற்றும் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றினர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 2ம் கட்டமாக  வரும் 12ம்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்கள் மற்றும் ராஜகோபுர விமான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் வளாகத்தில் வரும் 12ம் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

Related Stories: