திருச்சி: திருவானைக்காவல்ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் முதற்கட்டமாக பாிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பஞ்ச பூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதையொட்டி முதல்கட்டமாக பரிவார மூர்த்திகளுக்கு நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னதாக நேற்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 7 மணியளவில் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 7.55 மணிக்கு அனைத்து பரிவார விமானங்கள், பாிவார மூர்த்திகள், உற்சவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.