திருப்பதி: தாதையகுண்டா கங்கையம்மன் கோயிலில் நவராத்திரியையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. திருப்பதியில் உள்ள தாதையகுண்டா கங்கையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா நேற்று காலை தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. முன்னதாக கணபதி பூஜை நடந்தது. பின்னர் வேத பண்டிதர்கள் வேதம் முழங்க கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், எம்எல்ஏ சுகுணா, கோயில் அறங்காவலர் குழு தலைவர் முனி கிருஷ்ணா, செயல் அலுவலர் சுப்பிரமணியம் உட்பட ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை பாலா திரிபுரசுந்தரி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.