திருமலை: திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 2ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல்நாளான நேற்றிரவு 7 தலைகளுடன் கூடிய பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி, பூதேவி தாயாருடன் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 2ம் நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி கிருஷ்ணர் அலங்காரத்தில் மாடவீதியில் பவனி வந்தார்.