வத்திராயிருப்பு: முத்தாலம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, வத்திராயிருப்பில் இன்று தேரோட்டம் நடக்கிறது. வத்திராயிருப்பில் முத்தாலம்மன் பொங்கல் கலைவிழா மற்றும் தேரோட்டம் கடந்த 2ம் தேதி மதுப்பொங்கலுடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு மேல் முத்தாலம்மன் கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு நேரத்தில் முத்தாலம்மன் தேரில் அமர்ந்து பவனி வந்தார்.