குறிச்சியில் வரசித்தி விநாயகர் கோயிலில் பூக்குழி விழா

நெல்லை: மேலப்பாளையம் குறிச்சி வரசித்தி விநாயகர் கோயிலில் குலசை தசரா குழு சார்பில் பூக்குழி விழா நடந்தது. இதையொட்டி வரசித்தி விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீராடி ஊர்வலமாக வருதல், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு, இரவு 8 மணிக்கு பூக்குழி நிகழ்ச்சி, 9 மணிக்கு காளி பூஜை, 9.30 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி நடந்தது. ஏற்பாடுகளை குறிச்சி வரசித்தி விநாயகர் தசரா குழு விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இதேபோல் சந்திப்பு மீனாட்சிபுரம் ஜெயஸ்ரீ வீரபத்ரகாளி தசரா குழு சார்பில், ஸ்ரீவடக்கத்தி அம்மன் கோயில் அருகே காளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவில் தாமிரபரணியில் இருந்து தீர்த்தவாரி எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: