கருவாழைக்கரை என்ற சிற்றூரில் காஞ்சி காமகோடி பீடாதிபதியான மகாபெரியவர் இத்தலத்திற்கு வந்தபோது இந்த மாரியம்மனே காமாட்சியாக காட்சி கொடுத்தாளாம். அது முதல் இவளை காமாட்சி என்றே அழைக்கிறார்கள். பேரெழிலும் துடிப்பும் பொங்கும் அருளும் கொண்ட அன்புருவான அன்னை. பல வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இவளே குல தெய்வமாக விளங்குகிறாள். பிரதி தினம் மதியம் 12 மணிக்கு அபிஷேக ஆராதனை நிகழ்த்துகின்றனர். யார் வந்தாலும் இந்நேரத்தில் மாற்றம் இல்லை. குறிசொல்லும் வழக்கம் இங்கு உள்ளது.