10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கும் ஆண்ட்ரியா

சென்னை: திரையுலகில் நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், தற்போது தமிழில் ‘பிசாசு 2’, ‘கா’, ‘மாளிகை’, ‘நோ என்ட்ரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2013ல் தெலுங்கில் ரிலீசான ‘தடக்தா’ என்ற படத்தில் நடித்தார். அவருடன் நாகசைதன்யா, தமன்னா, சுனில் நடித்தனர். ஆண்ட்ரியா தெலுங்கில் நடித்த ஒரே படம் இது. இந்நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.வெங்கடேஷ் நடிப்பில் உருவாகும் 75வது படமான ‘சைந்தவ்’ படத்தில் ஆண்ட்ரியாவை தவிர ஷ்ரத்தா நாத், ருஹானி சர்மா ஆகிய ஹீரோயின்களும் நடிக்கின்றனர். பாலிவுட் முன்னணி நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடிக்கிறார். இப்டத்தை சைலேஷ் கொலமனு இயக்குகிறார்.

The post 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கும் ஆண்ட்ரியா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: