துபாய்: இஸ்லாமிய பெருமக்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு சவூதி, அமீரகம், குவைத் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் துவங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டி ரமலான் மாத நோன்பின் பிறைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நேற்று 06-05-2019 திங்கள் கிழமை முதல் நோன்பு ஆரம்பமாகிறது என தெரிவிக்கப்பட்டது. இதனையோட்டி நேற்று முன் தினம் இரவு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.