துபாயில் முதல் நோன்பில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சி துபாய். தமிழர்களை நிர்வாகிகளாக கொண்டு செயல்படும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்ட்ர் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சியில் தமிழக பாரம்பரியத்துடன் கூடிய நோன்புக் கஞ்சியினை வழங்கி வருகிறது. இந்த ஏற்பாடுகள் ஈமான் அமைப்பினரால் துபாய் தேரா பகுதியில் உள்ள குவைத் பள்ளி என்றழைக்கபடும் லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் பள்ளி வளாகத்திலும் அதன் அருகில் உள்ள இடங்களிலும் நடைபெற்று வருகின்றன.

தினமும் 5000 க்கும் மேற்பட்டோர் இந்த இஃப்தார் என்றழைக்கப்படும் நோன்பு துறப்பு நிகழ்வில் பங்கேற்கின்றனர். இதில் நோன்புக் கஞ்சியுடன், சமோசா, வடை, பழம், மினரல் வாட்டர், பேரித்தம் பழம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 150 பேருடன் துவங்கிய இச்சிறு நிகழ்வு இன்று பிரம்மாண்டமாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் வழிகாட்டுதலில் மற்றும் பொது செயலாளர் ஹமீது யாசின் தலைமையில் ஈமான் அமைப்பின் துணை பொது செயலாளர் முஹைதீன் அப்துல் காதர், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்துல்லா, விழாக்குழு செயலாளர் ஜமால், ஆலோசகர்கள் அஷ்ரப்,யஹ்யா , நிர்வாக செயலாளர் காதர், துணை செயலாளர் யாகூப், சித்தீக், பாஷா, உஸ்மான், ஷமீம்,ஹிதயத்துல்லா,முஹம்மது அலி,ஷர்புதீன்,முஸ்லிம்,ஜமால் களஞ்சியம் உள்ளிட்ட ஏராளமானோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முதல் நாளான நேற்று 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

Related Stories: