லூசியா, யூ டர்ன் படங்களுக்கு பிறகு பஹத் பாசிலை இயக்குகிறார் பவன்குமார்

சென்னை: பவன்குமார் இயக்கும் பான் இந்தியா படத்தில் பஹத் பாசில் நடிக்கிறார். கன்னடத்தில் ‘லூசியா’, ‘யூ டர்ன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப் பெற்றவர் இயக்குனர் பவன்குமார். அவரது இயக்கத்தில் பஹத் பாசில் நடிக்கும் புதிய படம் ‘தூமம்’. இப்படத்தை ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஎஃப் 2’, ‘காந்தாரா’ படங்களைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அபர்ணா பாலமுரளி, ரோஷன் மாத்யூ உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பூர்ணச்சந்திர தேஜஸ்வி இசையமைக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. டார்க் திரில்லர் ஜானரில் படம் உருவாக உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக்கில் பஹத் பாசில் வாயில் டேப் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டிலில் புகை வெளியாவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹீரோயின் முகம் தலைகீழாக வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதை சொல்லலில் கைதேர்ந்தவர் பவன்குமார். அதனால் அவரது தூமம் படமும் வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என படக்குழு கூறுகிறது.

The post லூசியா, யூ டர்ன் படங்களுக்கு பிறகு பஹத் பாசிலை இயக்குகிறார் பவன்குமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: