வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்தது. தொடர்மழையால் நிரம்பிய ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மலைகளின் இளவரசி கொடைக்கானலில் வார இறுதி நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அங்கு கூடிய சுற்றுலா பயணிகள் கோக்கர்ஸ் வாக், தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளை முற்றுகையிட்டு, இயற்கை அழகை ரசித்தனர்.