ஊட்டி: இண்டாம் சீசன் துவங்க நான்கு நாட்களே உள்ள நிலையில், ெதாட்டிகளில் வைக்கப்பட்டுள்ள சால்வியா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தவில்லை என்றாலும், அதற்கு இணையாக மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி பூங்கா முழுவதிலும் புதிய மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், பூக்கள் பூத்து குலுங்கும். இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதம் துவங்கி இரு மாதங்கள் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக பூங்காவில் மலர் செடிகள் நடவு பணிகள் கடந்த ஒரு மாத்திற்கு முன் துவங்கியது. அதே போல் 10 ஆயிரம் தொட்டிகளிலும் பல்வேறு செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக செப்டம்பர் மாதம் துவக்கத்தில் பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும்.