ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் கார்டனில் பாத்திகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் தற்போது பூக்க துவங்கியுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். ஊட்டியில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் புதிய மலர் செடிகள் நடவு பணிகள், தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்தல், ரோஜா செடிகளை கவாத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து பூங்காகளில் மலர் செடிகள் பூக்க துவங்கி உள்ளன.