தென்காசி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளபட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் மெயினருவி, ஐந்தருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மே மாத இறுதியிலேயே சற்று முன்னதாக துவங்கிவிட்டது. துவக்க நாளன்றே அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம்
இரவு முதல் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தடை விலக்கப்பட்டு அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.