பென்னாகரம் : கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு, வார விடுமுறை தினங்களில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். காவிரியில் தண்ணீர் வரத்து முற்றிலும் சரிந்த நிலையில் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல், ஒகேனக்கல் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 17ம் தேதி வரை 200 கன அடி மட்டுமே நீர் வரத்து இருந்து வந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும், துணை நதியான பாலாறு பகுதியிலும், லேசான மழை பெய்து வருவதால், கடந்த 18ம் தேதி முதல் ஒகேனக்கல்லுக்கு 1000 கன அடியாக நீர் வரத்து அதிகரித்தது.