தென்காசி: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக குற்றாலத்தில் கடும் வெயில் வாட்டி வந்ததால், அருவிகள் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
இதனால் நேற்று முன்தினம் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு வெள்ளமாக கொட்டியது.