சூளகிரி, மார்ச் 28: சூளகிரி அருகே தாசனபுரம் கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் 3 நாட்கள் பஜனை பல்லக்கு சுவாமி வீதி உலா நடைபெற்றது. ேநற்று பூக்களால் அலங்கரித்த தேர் மீது சுவாமியை அமர்த்தினர். இதில், ஓசூர் சப்கலெக்டர் சரண்யா, சூளகிரி தாசில்தார் பன்னீர்செல்வி, கோயில் தலைவர் மது (எ)ஹேம்நாத், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக தேரை இழுத்து சென்றனர். இதில் தாசன்புரம், அத்திமுகம், பேரிகை, அட்டகுறுக்கி, புக்காசாகரம், சூளகிரி, காமன்தொட்டி, பேரண்டப்பள்ளி, கோபசந்திரம், ஓசூர், மாலூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.