அயோத்தியாப்பட்டணம், மார்ச் 25: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் மாணிக்கம்(47). கூலி தொழிலாளியான இவரது மனைவி ரஜினி(43). அதே பகுதியைச் சேர்ந்த வேலு மகன் பெருமாள்(55). இவருக்கும், ரஜினிக்கும் தகாத உறவு உள்ளதாக மாணிக்கத்திற்கு சந்தேகம் இருந்துள்ளது. இந்நிலையில், பெருமாளிடமிருந்து, மாணிக்கம் ₹60 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக நேற்றிரவு 8.30 மணியளவில், இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.