பெரம்பலூரில் வெளுத்து கட்டிய மழை பொது நிலங்களில் உள்ள மரங்களை வனத்துறை அனுமதிக்கு பிறகே வெட்ட வேண்டும்

பெரம்பலூர்: அரசு மற்றும் பொதுநிலங்களில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட வனத்துறை, மாவட்ட பசுமை குழு ஒப்பதலுக்கு பின்புதான் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பெரம்பலூரில் நடந்த பசு மைக்குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பசுமைக்குழு கூட்டம் நேற்று (23ம் தேதி) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரம் பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமைவகித்து பேசியதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பினை அதிக ரிக்கும் பொருட்டு அனைத் துத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மரக்கன் றுகள் நடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடை யே எடுத்துரைத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மரங்களை நட் டு வளர்ப்பதற்காக இது வ ரை சுமார் 258.32 ஹெக்டேர் பரப்பிலின நிலங்கள் ஒது க்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மண்ணிற்கேற்ப உள் நாட்டு மரங்களை நாற்றங் காளில்வளர்க்க வேண்டும். பசுமை பரப்பினை அதிகரி க்க மரம் நடுவதில் பள்ளி, கல்லூரி மாணவர்களை யும் ஈடுபடுத்த வேண்டும். அரசு மற்றும் பொது நிலங் களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு முன்னர் மா வட்ட வனத்துறையிடம் முறையாக விண்ணப்பித்து, மாவட்ட பசுமை குழுவின் ஒப்பதலுக்கு பின்னர் மரங் களை அப்புறப்படுத்த வே ண்டும். அதற்கான உரிய வழிமுறைகளைப் பின்பற் றி மரங்களை நடவேண்டும் என மாவட்டகலெக்டர் தெரி வித்தார். கூட்டத்தில் அரசு மற்றும் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட பசுமைக் குழுவில் ஒப்புதல் மற்றும் அங்கீகரி க்கப்பட்ட பின்னர் அனுமதி வழங்குதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்ட த்தில் குன்னம் ஆர்டிஓ, வேளாண்மை துணை இயக்குநர், (வேளாண்மை வணிகம்), நார ணமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர், இந்திய தே சிய நெடுஞ்சாலை ஆணை யம் திருச்சி, குன்னம் உத வி கோட்டப் பொறியாளர் ஆகியோர்களின் மூலம் மரம் வெட்டுவதற்காக வரப்பெற்ற விண்ணப்பங்கள் விவாதிக்கப்பட்டு இந்த பசுமைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மா வட்ட எஸ்பி ஷ்யாம்ளா தே வி, மாவட்ட வனஅலுவலர் குகனேஷ் மற்றும் மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: