காவலர்களுக்கு மோர் வழங்கல் திருவளக்குறிச்சியில் அரசு பள்ளி ஆண்டுவிழா கொண்டாட்டம்

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா,திருவளக்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னசாமி தலைமை வகித்தார். இரூர் ஒன்றிய கவுன்சிலர் சிவராஜ்,பாடாலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் தீபா,வார்டு உறுப்பினர்கள் கதிரேசன், நிர்மலா ஆகியோர் முன்னிலை வைத்தனர். பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் வஹிதா பானு வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆண்டறிக்கையை ஆசிரியர் கணேசன் வாசித்தார். விழாவில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் செல்வக்குமார், கருப்பையா உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர் சுமதி நன்றி கூறினார். முடிவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Related Stories: