பொன்விழா ஆண்டையொட்டி சைக்கிளில் பேரணியாக வந்த பெண் காவலர்களுக்கு வரவேற்பு

குன்னம்: திருமாந்துறை டோல்கேட்டில் சைக்கிள் பேரணியாக வந்த காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமாந்துறையில் காவல் துறையில் பணி புரியும் பெண்களின் 50 வது பொன் விழாவை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த காவல் துறையினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் சென்னையில் இருந்து சைக்கிள் பேரணியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்கின்றனர் அவர்களுக்கு திருமாந்துறையில் உள்ள பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர், புனித ஆண்ட்ரூஸ் பள்ளி பாதர் மைக்கேல் மற்றும் பணியாளர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Related Stories: