பெரம்பலூர், செப். 27: பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீ வெங்கடப்பிரியா தலைமையில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 205 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடப்பிரியா தலைமையில் நேற்று பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (26ம் தேதி) நடைபெ ற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது : பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். கோரிக்கைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களை நாடி வந்து பொதுமக்கள் தரும் மனுக்களை உரிய ஆய்வுக்கு உட்படுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.