மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

தா.பழூர், ஆக.12: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் புரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த பகுதியில் மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது புரந்தான் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சிலம்பரசன் (26) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவரது வீட்டின் பின்புறம் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து சிலம்பரசனை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: