குழந்ைத திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்

பெரம்பலூர், ஆக.11:  பெரம்பலூரில் பாலக்கரை யில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் சமூக நலன் மற் றும் மகளிர் உரிமை துறை யின் மூலம், யுனிசெப் மற் றும் தோழமை தன்னார் வலத் தொண்டு நிறுவனத் துடன் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தை திருமண த்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பெரம்பலூர் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நே ற்று (10ம்தேதி) நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அப்பணியை சமூக அக்கறையு டன் கையாண்டு பொதுமக் களிடம் விரைந்து செல்வத ற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் சீரார் நிதி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராம ரிப்பு சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்உள்ளிட்ட சட்ட ஆலோ சனைகளும், குழந்தைகளி ன் கருத்துகளுக்கு மதிப்ப ளிப்தோடு ஊடகங்களில் குழந்தைகள் கருத்துக்க ளை தெரிவிப்பதற்கு வா ய்ப்பு ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் (மாநில வள மையம்) பூர ணி, மூத்த பத்திரிகையா ளர் ராமசுப்ரமணியன் (எ) மணி, தோழமை தொண்டு நிறுவன இயக்குநர் தேவ நேயன், வழக்கறிஞர் சுப. தென்பாண்டியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கள் மகாகிருஷ்ணன், பெருமாள், தோழமை ஒருங்கி ணைப்பாளர் பிரபாகர், பெ ரம்பலூர் மாவட்டத்திலுள்ள செய்தியாளர்கள், புகைப்ப டக்காரர்கள், ஒளிப்பதிவா ளர்கள் மற்றும் ரோவர் கல் லூரியில் பயிலும் ஊடகவியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: