பெரம்பலூர்,ஆக.10: பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் 75வது இந்திய சுதந்திர தின விழா பாதயாத்திரை பூலாம்பாடியிலிருந்து கிருஷ்ணாபுரம் வரை 12கிமீ நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட காங் கிரஸ் கமிட்டியின் சார்பில் 75வது இந்திய சுதந்திர தின பவள விழாவை முன் னிட்டும், மத்திய பிஜேபி அரசு மக்களை வஞ்சிக்கும் வகையில் கொண்டு வந்து ள்ள விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி விலை ஏற்றம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையிலும் மாபெரும் பாதயாத்திரை நேற்று(9ம்தேதி) பூலாம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கமிட் டியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை யில் துவங்கியது.